பிடரிக்கண்

பின் மூளையின் நடு இடமே பிடரிக்கண். இந்த இடத்தில் முதுகெலும்பின் உள் வழியாய் நெற்றிக்குக் கருவாகிய விந்து எனும் குண்டலினி வரும்போது இந்த இடத்தை உராய்ந்து கொண்டு வருவதால், அங்கு ஏற்படும் வெப்பத்திற்குச் சோமவட்டம் என்று பெயர். இப்பின் மூளையில்தான் நாம் கேட்டதும், பார்த்ததும், நினைத்ததும், நுகர்ந்ததுமான எல்லாப்பதிவுகளும், அணுக்களாகப் பதிந்து இருக்கின்றன.