உச்சிக்கண்

	"தென்னாடும் வடநாடும் கண்ணிடை நடுநாடும்
	கீழ்மூலநாடும் அறிவமுத நாடும், கூடிக்குலாவும்
	நன்னாடு அந்நாடு என்னாடு சென்னி நாடே.
	தொட்டேன் தொட்டுத் தொட்டு எல்லாம்
	விட்டெ விட்டேன் பின் ஒன்றைத் தொட்டேன்
	அதை விடமுடியா மேல்நிலை சென்றேன்
	அது எது? அதுவே என்னிலை உணர்வு."
தலைக்குமேல் நடு மண்டை ஓட்டிற்குள்ளே அமைந்துள்ள இடமே உச்சிக்கண். நெற்றிக்கண் வழியாய் விந்தாகிய குண்டலினி இந்த இடத்தில் வந்து அழுத்துவதே உணர்வாகும். இதனால் ஏற்படும் இன்பமே பேரின்பம். உச்சிக்கு விந்து போகக்கூடிய வழி, தூண்டில் முள்ளின் நாவைப்போல் இருப்பதால் குருவில்லாமல் செய்யும் தவங்களால் விந்து உச்சிக்குச் சென்றால், சத்துள்ள விந்துவாய் இருந்து, பித்த உடம்பாய் இருந்தால் தலைப்பாரம், நோவு, துன்பம் தொந்தரவுகள் ஏற்படும். சிலபேர்கள் அறிவின் உணர்ச்சிக்கெட்டுப் பைத்தியக்காரனைப் போலாகிவிடுவார்கள்.